தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதே போல 2024ஆம் ஆண்டும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பச்சரிசி, கரும்பு போன்ற பொருட்களும் தரப்பட இருப்பதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் நான்கு மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை காரணம் காட்டி மற்ற மாவட்ட மக்களை கைவிடக்கூடாது என்பதால் ஜனவரி 2வது வாரத்தில் பொங்கல் பரிசு வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.