தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இனி மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கப்பட உள்ளது.