திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் சுவாமி தரிசனம் செய்ய மலையை சுற்றி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேலம் போக்குவரத்து கோட்டத்தின் சார்பில் சேலம் மண்டலத்தில் 50 பேருந்துகளும் தர்மபுரி,கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மண்டலத்தில் 50 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்பு பேருந்துகள் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இயக்கப்படுவதாக சேலம் கோட்டை போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனைப் போலவே அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு மாதமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.