சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்குடியை சேர்ந்த மாரி (29) என்பவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்வியின் தந்தை முருகன் செல்வியின் அறையை சோதனை செய்தபோது அங்கு இருந்த ஒரு டைரியில் செல்வி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் தன்னுடைய இறப்புக்கு காரணம் கணவர் மாறி மற்றும் அவரது குடும்பத்தினர் என்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தை செல்வியின் தந்தை போலீசில் ஒப்படைத்த நிலையில் போலீசார் மாரியை கைது செய்துள்ளனர்.