நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி, என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். நான் என்னுடைய மனைவி இழந்த தவிப்பது போல என்னைப் போல நீங்களும் எவ்வளவு வலிகளோடு கணவனை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எனவேதான் உங்களில் ஒருவனாக ஒரு சகோதரனாக உதவி செய்ய வேண்டும் என்று இந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்றாவது கணவனை இழந்த பெண்களுக்கு உதவி செய்வேன் என்று கூறினார். சி.வெ.கணேசனின் மனைவி கடந்த 2021ல் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.