சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகை, திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.