சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்படி 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X, H, H1 மற்றும் Drugs குறிப்பிட்டுள்ள மருந்து விற்பனை செய்யும் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். ஆய்வின்போது சிசிடிவி கேமரா பொருத்தாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.