சிவராத்திரி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 1370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சிவராத்திரி மற்றும் முகூர்த்த தினமான வெள்ளிக்கிழமை அதனை தொடர்ந்து வார விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பல இடங்களுக்கு நாளை மார்ச் ஏழாம் தேதி 270 பேருந்துகளும், மார்ச் 8 ஆம் தேதி 390 பேருந்துகளும், சனிக்கிழமை 430 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1360 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.