தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும் தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயர் அதிகாரிகளுக்கு தங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றம் இல்லை. எனவே திருப்பதி வரும் பக்தர்கள் மற்றும் விஐபிக்கள் விதிகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.