அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் நான்காம் தேதிக்கு பதிலாக ஜூன் இரண்டாம் தேதியே எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜூன் இரண்டாம் தேதி நிறைவடைவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.