நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகள் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் தமிழகத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவகங்கையில் தேர்தல் விதிமுறையை மீறி ஊர்வலம் சென்று சிலைகளுக்கு மாலை அணிவித்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.