திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற ஜூன் 19ஆம் தேதி திங்கட்கிழமை திருவாரூரில் நடைபெறும் நிகழ்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி செல்லும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.