மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.