சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரகளைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி நிலைப்பாட்டை பொறுத்தவரை மற்ற கட்சிகள் வந்தால் ஆதரிப்போம், இல்லை என்றால் தனித்து நிற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளிப்பேன் எனக் கூறிய பாமக தான் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் சொந்த பலத்தில் தேர்தல் களம் காண்போம் என அவர் தெரிவித்துள்ளார்.