மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மேகாலயாவில் 85%, நாகாலாந்தில் 84% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் திரிபுராவில் பாஜக கூட்டணி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை பாஜக 40 இடங்களிலும், சிபிஎஸ் கூட்டணி 6 இடங்களிலும், திமோக 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற போதிலும் பாஜக கூடுதலான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால், அங்கு பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகிறது.