வேளச்சேரியில் பாஜக வேட்பாளர் தமிழிசை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள் தான் திராவிட மாடலின் பெருமையும் அடையாளமும் ஆகும். சென்னை சிங்கப்பூர் ஆக மாறும் என்றார்கள், மாறியதா? இந்த குப்பைக்கு தீர்வு கண்டார்களா? நீங்கள் மாற்றி யோசியுங்கள், மாற்றமா ஏமாற்றமா என முடிவு செய்யுங்கள். குப்பையை கூட சீராக்காத திராவிட கட்சிகளுக்கு குட் பை சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.