ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகளில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல்  நடைபெறும் சமயத்தில் வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும்  சாகு கடிதம் எழுதியுள்ளார்.

15 x 15 அடி அளவில் பந்தல் போடப்பட்டிருக்க வேண்டும். அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டிருக்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான அடிப்படை வசதிகளையும் உறுதிப்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.