தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்து விட்டார். இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநரின் உரைக்கு பிறகு முதலமைச்சர் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்து விட்டு சென்றது மிகவும் வருத்தமான விஷயம். இன்று அச்சிடப்பட்ட உரை  ஆளுநர் மற்றும் அவையில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டவை மட்டுமே இடம்பெற வேண்டும். எனவே அச்சிடப்பட்ட விஷயங்களை மீறி ஆளுநர் பேசியதால் அவரின் உரையை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் அவையை விட்டு உடனடியாக வெளியேறி விட்டார்.