இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தணடனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

அந்தக்வகையில் ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் பாலியல் வன்கொடுமை கொடூரம் நடந்துள்ளது. 6 மாணவிகளை பலாத்காரம் செய்ததாக அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமியின் புகாரையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சாக்லேட் வாங்கித்தருவதாக 8-12 வயது மாணவிகளை வீட்டிற்கு அழைத்து அவர் பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது.