மெக்சிகோ நாட்டிலுள்ள மனி நல்கோ நகருக்கு நேற்று முன்தினம் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து கெப்லுன்-ஷல்பா நகர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில் 31 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.