நான்கரை ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்னவெல்லாம் செய்தார் என்று எனக்கு தெரியும் என ஓ.பன்னிர்செல்வம் கூறியுள்ளார். அதையெல்லாம் நான் சொன்னால், அவர் திஹார் சிறைக்கு செல்வார். அரசு ரகசியங்கள் என்பதால் சொல்லாமல் இருக்கிறேன் என கூறியிருந்தார். அதற்கு பகிரங்கமாக கூறுகிறேன், நான் என்ன செய்தேன் என்று சொல்லுங்கள்.

அப்படி ஏதாவது செய்திருந்தால் திமுக என்னை சும்மா விட்டிருக்குமா? தன் குடும்பத்தின் பெயரில் பல சொத்துகளை குவித்து வைத்திருக்கிறார் ஓபிஎஸ். விரைவில் அவர் சிறைக்கு செல்ல தயாராகிவிட்டார். அதை மறைக்கவே என்னைப் பற்றி பேசுகிறார் என ஈபிஎஸ் பதில் கூறியுள்ளார்.