திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாதனவலசை கிராமத்தில் திருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா (29) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் மகன்கள் இருக்கின்றனர். திருநாதன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி இரவு நேரம் கீதா தனது குழந்தைகளுடன் தூங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று கீதாவை எழுப்பினர்.

ஆனால் கீதா எழுந்திருக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் கீதாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தது தெரியாமல் இரண்டு குழந்தைகளும் தாயுடன் தூங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.