தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தாய்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் பக்கபலமாக இருந்து தக்கபயன் நல்குவதாகும்.

திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களும் தளபதி ஏற்றி வைக்கும் இந்தத் திருவிளக்கில் தீபமேற்றிக் கொள்ளலாம் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.