மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இப்படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர்  மாரி செல்வராஜ் பேசுகையில், தான் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறினார்.

மேலும் ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது தற்கொலை கடிதம் ஒன்றை எழுதினராம். அப்போது கடிதம் எழுதும் நேரத்தில் அங்கு வடிவேலுவின் நகைச்சுவையை கண்டு ரசித்து சிரித்துள்ளார். அதன்பின் தற்கொலை செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டாராம். தன்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியது வடிவேலுவின் நகைச்சுவை தான் என கூறியுள்ளார்.