தமிழகம் முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய மக்கள் இன்னும் பரிதாபத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக ஆலந்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான விஜய் சேதுபதி ரசிகர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தக்காளியை வழங்கினார்கள். இதை பெற்றுக்கொண்ட மக்கள் கடுமையான விலையேற்றத்தை  காரணமாக சாமானிய மக்களாக எங்களுக்கு கடைகளில் தக்காள தக்காளி வாங்க முடியவில்லை. இது போன்ற இலவசமாக எங்களுக்கு தக்காளி வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்கள். இந்த சம்பவம் பொது மக்களிடையே பாராட்டப்பட்டுள்ளது..