பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், “நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கிய பாஜக உடன் கூட்டணி சேர்வது தற்கொலைக்கு சமம் என கூறினார் டிடிவி தினகரன். தற்போது எங்கே இருக்கிறார்? ஓபிஎஸ், டிடிவி இருவருமே தங்களை தற்காத்துக் கொள்ள பாஜகவிடம் சேர்ந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்