இன்று மாலைக்குள் மக்களின் வங்கி கணக்கில் ₹15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியதாக தமிழக காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. 2014 தேர்தல் பரப்புரையில் மோடி பேசியதை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ள காங்., அனைவரது வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இன்று முட்டாள்கள் தினம் (ஏப்.1) என்பதால் காங்., இதுபோன்று ட்வீட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.