EPF தொகையை, பழைய நிறுவனத்தின் கணக்கில் இருந்து புதிய நிறுவனத்தின் கணக்குக்கு தானாகவே மாறும் வசதி அமலாகியுள்ளது. முன்னதாக அந்த தொகையை டிரான்ஸ்ஃபர் செய்வது கடும் சவாலான பணி. இந்நிலையில், புதிய பட்ஜெட் அறிவிப்பின் படி தானாகவே டிரான்ஸ்ஃபர் ஆகும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக அலைய வேண்டிய பிரச்னை எதிர்காலத்தில் அறவே இருக்காது எனத் தெரிகிறது.