மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில், பொதுவெளியில் சிவபெருமான் மற்றும் சிவலிங்கம் குறித்து அவதூறான மற்றும் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்திய ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 9 மணியளவில், தானே மேற்குப் பகுதியில் உள்ள தீன் ஹாத் நாக்கா பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பொதுமக்களின் முன்னிலையில் இந்து மத கடவுளான சிவபெருமானையும், சிவலிங்கத்தையும் மிகவும் இழிவான முறையில் விமர்சித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சீர்கேடான செயலைப் பதிவு செய்த நபர் அதனைச் சமூக வலைதளத்தில் வெளியிட, அது காட்டுத்தீ போலப் பரவியது. ஆட்டோ ஓட்டுநரின் பொறுப்பற்ற மற்றும் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் இந்தப் பேச்சைக் கண்ட பல தரப்பினரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். வைரலாகும் அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட ஆட்டோவின் பதிவு எண் தெளிவாகத் தெரிவதால், அதனை அடிப்படையாகக் கொண்டு தானே காவல்துறையினர் உடனடியாக அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக வலைதளப் பயனாளர்களும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

“>

 

சமூக வலைதளங்களில் மத மோதல்களைத் தூண்டும் வகையிலும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படும் இதுபோன்ற நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.