ஆந்திர மாநிலம் பாப்பி கொண்டா என்கிற வனப்பகுதியில் இருக்கும் சில மரங்கள் தண்ணீரை சேமித்து வைப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதை சோதிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் தேசிய பூங்காவில் ஆய்வு நடத்தினர். அப்போது ‘இந்திய லாரல்’ (Terminalia tomentosa) மரங்களிலிருந்து பட்டைகளை வெட்டியுள்ளனர்.

அப்போது அதிலிருந்து தண்ணீர் பீய்த்துக் கொண்டு அடித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மரங்கள் இயற்கையாகவே, கோடை காலத்தில் நீரை சேமித்து வைக்கின்றன என்று அந்த பகுதி பழங்குடி மக்கள் தெரிவித்தனர்.