மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூரில் சுயேச்சை எம்.பி., வேட்பாளர் வனிதா ராவத் என்பவர் வியப்பூட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் எம்.பி.,யாக வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மானிய விலையில் பீர், விஸ்கி வழங்குவதாகவும், தனக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பெண் வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கிராமங்கள் தோறும் எம்.பி., நிதியில் வெளிநாட்டு மதுபானம், பீர் கொண்ட பார் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு மது அருந்துவது மட்டுமே ஆடம்பரம், அதனால்தான் அவர்களுக்கு இந்த திட்டம் தேவை என்று விளக்கமளித்துள்ளார்.