விருது விழாவில் கலந்துகொள்ளாத பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு நேற்று (மார்ச்31) அவரது இல்லத்துக்கே சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் உடன் இருந்தார். இந்நிலையில் எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர் இருக்கைகளில் அமர்ந்திருந்த நிலையில், திரௌபதி முர்முவுக்கு இருக்கை அளிக்கப்படாமல் அவர் நின்றபடி இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியான நிலையில் எதிர்கட்சித் தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.