அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு இரவு 10.30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்துள்ளது. விமானம் தரையிறங்கி விமான ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் விமானத்தின் அருகே அங்குள்ள ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அதிக அழுத்தத்தின் காரணமாக அந்த ஊழியர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.