தென் ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது. இந்நிலையில், ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது