பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொன்று விடுவேன் என கேங்ஸ்டர் கோல்டி பிரார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘சல்மானைக் கொல்வோம். கண்டிப்பாக கொன்று விடுவோம். பாய் சாப் (லாரன்ஸ் பிஷ்னோய்) கூட அவரை மன்னிக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், கனடாவில் மோஸ்ட் வான்டட் பட்டியலில் இருக்கும் கேங்க்ஸ்டர் பிராரை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர். நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தின் உணர்வுகளை 1998-இல் புண்படுத்தியதாக கோல்டி பிரார் கூறினார்.