பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா (74) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறினார். ஜென்டில்மேன் மற்றும் சந்திரமுகி என 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்தினம் மற்றும் சங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதிய இவ்வாறு கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.