தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமனம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ராஜேஷ்குமார் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் புதிய தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ் அழகிரி பதவி வகித்து வந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு கே.எஸ் அழகிரி ஆற்றிய பணியை பாராட்டுவதாக காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.