அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட பிறகு அக்கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத்தலைவர் இருக்கை தான் இருக்க வேண்டும் என்று அதிமுக சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து அது பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய ஓபிஎஸ், இருக்கை மாற்றப்பட்டது குறித்து எந்த வருத்தமும் இல்லை. நான் இருக்கையை கேட்கவே இல்லை அவர்களாக கொடுத்தார்கள், அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.