அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலை நூல்களாக வெளியிடுவதற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமையப்பெறும் வகையிலும் அடக்க விலையை விட குறைவான விலையாக தொகுதி ஒன்றுக்கு நூறு ரூபாய்க்கு மிகாமல் விலை வைத்து விற்பனை செய்யலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நூல்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.