சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மேரி வில்சனின் உரை நிச்சயமாக ஆரோக்கியமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பலவிதமான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் அவர்கள் எழுப்புவது இயல்புதான்.

ஆனால், அதற்குப் பதிலளிக்கும் போது நிதியமைச்சர் கோபப்பட்டுப் பேசியதும், தேவையற்ற மதச் சான்றுகளை அவைக்குள் இழுத்ததும் சரியான அணுகுமுறையாகப் பார்க்கப்படவில்லை.

சட்டப்பேரவையில் ராஜமோகன், ரமேஷ் போன்ற தலைவர்கள் எவ்வாறு திறம்பட உரையாற்றுகிறார்கள் என்பதைக் கண்டு அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. பிற தலைவர்களின் சுவாரஸ்யமான மற்றும் அமைதியான பேச்சை ஒப்பீடாக வைத்து, நிதியமைச்சரின் இன்றைய உரையாடல் முறை குறித்துப் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ‘பிறப்பால் கிறிஸ்தவன்’, விவிலியம் மேற்கோள்கள் எனத் தனது தனிப்பட்ட மத அடையாளங்களைச் சட்டமன்றத்தில் பேசியது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அவையில் இருக்கும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் மதத்தைப் பற்றி மட்டுமே பேசத் தொடங்கினால் அவையின் கண்ணியம் என்னவாகும் என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

முந்தைய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, திமுக உறுப்பினர்களுக்கு எதிராக ‘கூல் புரோ’  என்று அமைதியாகப் பேசிய இதே நிதியமைச்சர், இப்போது தனது பொறுமையை இழந்து மைக்-ஐ தூக்கிப் போட்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவையின் விதிகளை மீறும் வகையில் அமைந்த இந்தச் செயல் சட்டமன்ற மரபுகளுக்கு எதிரானது.

“>

 

இந்த விவகாரத்தை திமுக நினைத்திருந்தால் மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக மாற்றியிருக்க முடியும். ஆனால், சிறுபான்மையின மதக் காரணி அடங்கியிருப்பதால் அவர்கள் இந்த விஷயத்தில் அமைதி காப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் பாஜக மட்டுமே தற்போது தீவிரமாகப் போர்க்கொடி தூக்கி வருகிறது.