தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 6500 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அச்சகணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அரசின் கூட்டுறவு நியாய விலை கடைகள் சார்பாக மினி சூப்பர் மார்க்கெட் வழியே பொது மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 6500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.