தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் தமிழகத்தில் பல குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில் இந்த பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கின்றது. இதனால் தொடர்ந்து பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்.