தமிழகத்தில் ஒரே ஒரு சின்ன தவறால் வெள்ள நிதி 6000 ரூபாய் மற்றும் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் பலருக்கும் பறிபோனது. வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வாழும் மக்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமாக சென்னை முகவரிக்கு ரேஷன் கார்டை மாற்றவில்லை. இதுதான் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைக்காமல் போக காரணமாக மாறியது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர்களில் பலரும் சொந்த ஊருக்கு சென்று ரேஷன் கடைகளில் கைரேகை வைத்து பொங்கல் பணம் ஆயிரம் ரூபாயும் வாங்கவில்லை.