தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தடையற்ற மின்சாரம் வழங்கவே முயற்சி செய்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பயனாடி ஒருவர் அதிக மின்தடை ஏற்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர், பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் தடையற்ற மின்சாரம் வழங்கவே வலியுறுத்தி இருக்கிறேன். இது தொடர்பாக நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறேன் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.