தமிழகத்தில் நேற்று இரண்டு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பேரன்ஹீட்டை கடந்தது. ஈரோடு மற்றும் பரமத்தியில் வெப்பம் உச்சத்தை தொட்டதால் மதிய வேளையில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். கோடை காலம் தொடங்க இருப்பதால் இனி படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வயதானவர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மதிய வேலைகளில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.