தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் ரேஷன் கடைகளில் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்பாட்ற பொருள்கள் கட்டாயம் இல்லை என கூறப்பட்டாலும் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி அந்த பொருட்களை விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் மற்ற பொருள்களை வாங்க சொல்லி மக்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.