தமிழகத்தில் போக்குவரத்து துறையில் ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு காலி பணியிடங்களை நிரப்பாதது சர்ச்சையானது. இந்நிலையில் இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் ஏற்படுவது இயற்கையானது என்றும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். எனவே போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.