ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங். சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காங் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்கிறார். மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் காங். சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.