தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் மார்ச் 28ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து பேசிய போக்குவரத்து துறை பணியாளர்களின் சிறப்பு தலைவர் குரு பாலசுப்பிரமணியன், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.

சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பணியாற்றும் சூழல் உள்ளது. அதனால் சோதனை சாவடிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.