வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம் நவம்பர் நான்கு மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து நாளை இரண்டாம் கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.